வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...எரிந்து கருகி நாசமான முக்கிய ஆவணங்கள்...மக்கள் பணத்தின் நிலை என்ன ?

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில், நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வங்கி மேலாளர் அறையில் இருந்த கணினி, லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள், கடன்களுக்கான அசல் ஆவணங்கள் தீ விபத்தில் இருந்து தப்பியது.

X

Thanthi TV
www.thanthitv.com