தண்டவாளத்தில் திடீர் விரிசல்... உடனடியாக தகவல் சொன்ன இளைஞருக்கு பரிசு

x

மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரயில்வே பாதையில், சமயநல்லூர் பகுதியில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் பற்றி தகவல் தெரிவித்த இளைஞருக்கு, 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி ரயில்வேதுறை பாராட்டு தெரிவித்தது. ரயில்வே பாதை அருகே வசித்து வரும் கல்லூரி மாணவரான சூர்யா, விரிசலை கண்டறிந்ததும், ரயில்வே துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் விரிசலை சரி செய்தனர். இந்நிலையில், இளைஞரை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்