முதல்வருக்கு யோசனை கடிதம் எழுதிய மாணவி - திருப்பி பாராட்டு கடிதம் அனுப்பிய முதல்வர்

x

திருச்சி மாவட்டம் துறையூரில் இரவு நேரங்களில் சாலைகளில் நடமாடும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க யோசனை தெரிவித்து கடிதம் எழுதிய துறையூர் அரசு பள்ளி மாணவிக்கு முதல்வர் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க அவற்றிற்கு இரவில் பிரதிபலிக்கும் தோடு அல்லது பட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடிதம் எழுதி இருந்தார் துறையூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி லயஸ்ரீ... சிறுமியின் சீரிய ஆலோசனையை வெகுவாக பாராட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்... யூனிசெப் அமைப்புக்கு கொரோனா நிதி வழங்கியது அகில இந்திய வானொலியில் பத்து நிமிடம் உரையாற்றியது அகர வரிசைப்படி தமிழ் ஆங்கில பழமொழிகளை தொகுத்து நூல் வெளியிட்டது உள்ளிட்ட லயாவின் இதர சாதனைகளையும் முதல்வர் வெகுவாக பாராட்டி இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்