கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த மாணவர் - வீடியோ எடுத்து பயங்கர மிரட்டல்...

x

கன்னியாகுமாரியில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளிநாட்டு வேலைக்கு தப்பி சென்ற இளைஞரை 2 வருடத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.


நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்.

இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த போது, மாணவி ஒருவருடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.

அப்போது, மாணவியை நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்ற அபிஷேக், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளர்.

இதையடுத்து, மாணவியிடம் வீடியோவை காண்பித்து மிரட்டப்பட்ட்ட நிலையில், ஒரு கட்டத்தில் மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த அபிஷேக்கின் பெற்றோர், அவரை அவசர அவசரமாக துபாய்க்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்கள் முன்பு அபிஷேக் சொந்த ஊர் வந்திருப்பதை அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் அபிஷேக்கின் தந்தை மற்றும் நண்பர் மீது போலீசார் வழக்குபதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்