10 ரூபாய் நாணயத்தை கொடுத்த மாணவர் - ஆவேசமாக அடிக்க பாய்ந்த கடை ஊழியர்.. சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

சேலத்தில் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பொருள் வாங்க பள்ளி மாணவர் முயற்சித்த போது, அந்த நாணயத்தை கடை உரிமையாளர் வாங்க மறுத்து மாணவரைத் திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது...

சூரமங்கலம் பகுதியில் வட மாநிலத்தவர் நடத்தும் தேநீர் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது... இக்கடையில் சமோசா வாங்குவதற்காக சென்ற ரிச்சர்ட் என்ற பள்ளி மாணவர் 10 ரூபாய் நாணயத்தைக் கொடுத்துள்ளார். ஆனால் கடை ஊழியர்களோ அதை வாங்க மறுத்துள்ளனர். பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து கடை ஊழியர்களும், அதை வாங்க வலியுறுத்தி மாணவரும் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்