குஜராத்தில் இருந்து மதுரை வந்து ஆன்லைன் நண்பர்களிடம் உதவி கேட்ட மாணவி..மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம்

x
  • குஜராத்திலிருந்து கருத்தரங்கில் கலந்து கொள்ள மதுரை வந்த மாணவிக்கு உதவி செய்வதாக கூறி அவரை இளைஞர்கள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சாட்டர்டு அக்கவுன்ட் படித்து வந்துள்ளார்.
  • இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு தனது படிப்பு தொடர்பாக மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நிலையில், தெப்பக்குளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.
  • அப்போது, மாணவி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ஆன்லைன் படிப்பின்போது பழக்கமான சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் உதவ சென்றுள்ளனர்.
  • அங்கு, மாணவிக்கு வாங்கி வந்த உணவில் மயக்க மருந்து கலந்த இருவரும், அவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதன் பின்பு குஜராத் சென்ற மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
  • இதனால் அதிர்ச்சியிடந்த மாணவியின் பெற்றோர் ஆன்லைன் வழியாக மதுரை போலீசில் புகாரளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அஷீஷ் ஜெயின், ஜெரோம் கதிரவனை ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்