பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சரிடம் திடீரென கடிதம் கொடுத்த மாணவன் - உடனே அமைச்சர் சொன்ன பதில்

x

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து, அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஜெயசீலன் என்ற பள்ளி மாணவன், அமைச்சரிடம் கடிதம் ஒன்றை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் கடிதம் பற்றி கேட்க, பள்ளிகளில் செஸ் போட்டியை ஊக்குவிக்க பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அதற்கான உபகரணங்களை தர வேண்டுமெனவும் ஜெயசீலன் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ், நிச்சயம் இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்