ஒரு தெருவே ஆடு, மாடுகளுடன் தாசில்தார் ஆபிஸில் தஞ்சம் - சேலத்தில் பரபரப்பு

x

ஓமலூர் அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பாதையை அடைத்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், ஆடு, மாடுகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். கருக்கல்வாடி கிராத்தில் உள்ள கரட்டுகாடு பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், அப்பகுதிக்கு செல்லும் பிரதான சாலையை ஒரு தரப்பினர் அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஆடு, மாடுகள், குழந்தைகளுடன் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்துறை அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்து, பாதையை மீட்டு கொடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்