"லைக்ஸ்" குவிக்க விநோத முயற்சி... நடுரோட்டில் இளைஞர் செய்த சம்பவம் - சிக்னலில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி

x

ஈரோட்டின் பிரதான சிக்னலில் இளைஞர் ஒருவர் தண்ணீர் பக்கெட் உடன் வந்து குளித்ததால், சிக்னலில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும் சூழலில், ஃபாருக் என்ற இளைஞர், பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில், தான் கொண்டு வந்திருந்த ஒரு பக்கெட் தண்ணீரில் திடீரென்று குளிக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து, சிக்னலில் காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, ஃபாருக்கிடம் விசாரித்த போது, இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் லைக்ஸ் அதிகம் வரும் என்பதற்காக இப்படி செய்ததாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்