உறைந்து பனிக்கட்டியான குளம்... நடுவே சிக்கிக் கொண்ட மான்போராடி காப்பாற்றிய சமூக சேவகர்

x

உறைந்து பனிக்கட்டியான குளம்... நடுவே சிக்கிக் கொண்ட மான்போராடி காப்பாற்றிய சமூக சேவகர்

கடுங்குளிரால் உறைந்து போன குளத்தில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொண்ட மானை சமூக சேவகர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பூமியின் வடதுருவம் மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளில் தற்போது குளிர்காலம் ஆரம்பித்துள்ளது...

அதனால் அங்கு உள்ள நீர்நிலைகள் உறைந்து காணப் படுகின்றன. காட்டில் இருந்து ஓடி வந்த மான் அது உறைந்த குளம் என்று தெரியாமல் அதன் மேல் நடந்து சென்று விட்டது...

ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மானால் நடக்க முடியாமல் போகவே, அங்கேயே விழுந்து உயிருக்கு போராடியது...

இதை அறிந்த சமூக சேவகர் ஒருவர் மானை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார்... உயிர் பிழைத்த மான் கரை சேர்ந்ததும் தப்பித்து காட்டுக்குள் ஓடி மறைந்தது...


Next Story

மேலும் செய்திகள்