இளைஞரின் உயிருக்கு எமனான பாம்பு...சாலை வசதி இல்லாததால் அரங்கேறிய சம்பவம்..வழியிலேயே பிரிந்த உயிர்

x

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டுக்கொந்தரை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சங்கர், இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நள்ளிரவில், வீட்டிற்குள் நுழைந்த கட்டுவிரியன் பாம்பு, சங்கரின் கையில் சுற்றிக் கொண்டு, அவரை கடித்துள்ளது. வலியால் அலறித் துடித்த சங்கரை, மனைவியும், உறவினர்களும் மீட்டு, 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரி கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், முறையான சாலை வசதி இல்லாததால், சங்கரை மருத்துவமனை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வழியிலேயே சங்கர் உயிரிழந்துள்ளார். இதே பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா, பாம்பு கடித்து உயிரிழந்து. அப்பகுதியில் சாலை வசதி இல்லாததே இத்தகைய சம்பவங்களுக்கு காரணம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது, சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்ற வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்