ஸ்கூட்டிக்குள் புகுந்த பாம்பு..காலால் மிதித்து பிடித்த தீயணைப்பு வீரர்..திண்டுக்கல் அருகே பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஸ்கூட்டிக்குள் புகுந்த கொம்பேறிமூக்கன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாகராணி என்பவரின் இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். பின்னர், விரைந்து வந்த வீரர்கள், மெக்கானிக் ஒருவரின் உதவியுடன் ஸ்கூட்டியில் இருந்த 3 அடி நீள கொம்பேறிமூக்கன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்