குடிபோதையில் மூஞ்சிலேயே டிஷ்யூம்...டிஷ்யூம்...! மதுபிரியர்களிடம் சிக்கி சின்னாபின்னமாக 'டீ' கடை

x

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தேநீர்க் கடைக்கு மதுபோதையில் வந்த மூன்று பேர், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அவர்கள் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கடையில் இருந்த பொருள்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

இதுகுறித்து தட்டிக்கேட்ட கடையின் ஊழியர் கலையரசன் என்பவரையும் அவர்கள் தாக்கினார்கள்.

இந்த மோதலில், சேலம் நெசவாளர் காலனியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீசார், ஜீவானந்தத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அருண்குமார் என்பவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்