சென்னையில் மீண்டும் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு? - மக்கள் கடும் அவதி

x

சென்னையில் மீண்டும் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து காலை 4 மணிக்கு வர வேண்டிய பாலானது 8 மணி வரை வராத காரணத்தால் அண்ணாநகர், அமைந்தகரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இன்று காலை ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை. பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பிரச்சினையில் 15க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் பண்ணைக்குள்ளேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆவின் பால் கிடைக்காத காரணத்தால் தனியார் பாலை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்