பழம் கொடுக்க மறுத்த வியாபாரி...பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் - குமரியில் அதிர்ச்சி

x

நாகர்கோவிலில், பழம் கொடுக்க மறுத்த வியாபாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமன்புதூர் பகுதியில் உள்ள பழக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், பழம் வேண்டும் என கேட்டதாக தெரிகிறது. கடையை மூடிவிட்டதால் பழம் கொடுக்க முடியாது என உரிமையாளர் பிரேம் ஆனந்த் கூறிய நிலையில், அந்த இளைஞர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை பிரேம் ஆனந்த் மீது ஊற்றி தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் பிரேம் ஆனந்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த நேசமணி நகர் போலீசார், அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்