6 மாதமாக போலீசை தலையை பிய்த்து கொள்ள வைத்த வழக்கில் அதிர்ச்சி திருப்பம்

x

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த கிரி என்கிற கிருபாகரன் என்கிற இளைஞர் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதியன்று காணாமல் போனதாக அவரது சகோதரிகள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆறு மாதங்களாகியும் இந்த வழக்கில் போலீசாருக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், கிருபாகரனின் நண்பர்களே அவரை கொலை செய்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அவரது நண்பர்களை அழைத்து விசாரித்த போது, மதுபோதையில் கிருபாகரனை கொலை செய்து ஆளரவமற்ற கிணற்றில் கல்லைக் கட்டி வீசியதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த ஹரிஷ், ஆகாஷ், கார்த்தி, தாமோதரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, கிணற்றில் வீசப்பட்ட கிருபாகரனின் உடலையும் மீட்டனர். மேலும், காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்