கடனை வசூலிக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி.. கதவை தட்டியும் திறக்காத கணவன்,மனைவி - அடுத்து காத்திருந்த பயங்கரம்

x

கேரள மாநிலம் திருச்சூரில் கணவனும், மனைவியும் வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சூரிலுள்ள கோழிசேரி மாஸ்கோ பாலம் அருகே வசித்து வந்த தம்பதி சஜீவ் - திவ்யா. இவர்கள், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றிருந்த நிலையில், கடனை வசூலிப்பதற்காக நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது, கணவன்-மனைவி இருவரும் படுக்கையறையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்றனர். விசாரணையில், இருவரும் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்தது தெரியவர, கொலையா? தற்கொலையா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்