இரவு ரோந்தில் ஈடுபட்ட வனத்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி -சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி

x

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். ஒடுக்கத்தூர் வனத்துறையினர் நேற்று இரவு மேல் அரசம்பட்டு வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து, வனத்துறையினர் ஒருவரை விரட்டி பிடித்து, 100 கிலோ எடைக்கொண்ட 3 சந்தனமரங்களைபறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரை ர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்