"அடுத்தடுத்து அரங்கேறிய கொள்ளை" - வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்த ஆலையை.. சுற்றிவளைத்த பொதுமக்கள் - மீஞ்சூரில் பெரும் பரபரப்பு

x
  • மீஞ்சூரில், தொடர் திருட்டு நடைபெறுவதாக கூறி, வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்த அரிசி ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

  • திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செயல்பட்டு வரும் அரிசி ஆலையில் 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
  • இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • நேற்று நள்ளிரவு, அப்பகுதி மக்கள் வடமாநிலத்தவர்கள் தங்கி இருந்த அரிசி ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வடமாநில தொழிலாளர்களை கண்காணிப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்