திருமணமான மறுநாளே புதுபெண் பலி...பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் - கேரளாவில் தொடரும் அடுத்தடுத்து சம்பவம்

x

திருமணமான மறுநாளே புதுபெண் பலி...பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் - கேரளாவில் தொடரும் அடுத்தடுத்து சம்பவம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, திருமணமான மறுநாளே பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், உடலில் விஷம் கலந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.கேரள மாநிலம் பாலக்காடு அருகே அழகாபுரி பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு அடுத்த நாள், நந்தினி திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் பெண்ணின் குடும்பத்தாருக்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், நந்தினியின் உடலில் விஷம் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே, நந்தினி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்