VAO மீது அடுத்தடுத்து வந்த புகார்.. சோதனைக்கு சென்ற அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கிராம நிர்வாக உதவியாளர் வீட்டில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கயம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார், லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதன் பேரில், அவரது அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம், மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, சுரேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து பாலக்காடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்