கனடாவில் இந்துக்கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம்வெளியான பரபரப்பு வீடியோ

x

கனடாவில் உள்ள ஒரு இந்துக்கோயில் மீது கருப்பு மை பூசப்பட்டு இந்தியாவுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கடந்த சில காலமாகவே வெளிநாடுகளில் உள்ள இந்துக் கோயில்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கனடாவின் வின்ட்சர் நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயிலின் வெளிப்புறச்சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயம் பார்த்து எழுதியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் தேடப்பட்டு வரும் நிலையில், இது குறித்த பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்