பெற்றோருக்கு தெரிந்த ரகசியம்.. மறுநொடியே உயிரை மாய்த்த கல்லூரி மாணவன்

x

நாமக்கல்லில், ஆன்லைன் செயலியில் கடன் பெற்றது குறித்த தகவல் பெற்றோருக்கு தெரியவந்ததால், கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் அடுத்த செல்லப்பா காலனியைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவர், கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ஆன்லைனில் விளையாடுவதற்காக, ஆன்லைன் செயலி மூலம் 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றதாக தெரிகிறது. கடன் தொகையை முறையாக செலுத்தாததால், சம்பந்தப்பட்ட நிறுவனம் லோகேஷ்வரனின் பெற்றோரிடம் பணத்தை செலுத்துமாறு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லோகேஷ்வரன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்