#BREAKING | எலிக்காக வைத்த மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு - திருச்சியில் பரபரப்பு

திருச்சி, மணப்பாறை அருகே நெல் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு.
x

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் வயது 17. இவர் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இன்று இரவு அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் நெல் வயல் பகுதிக்குச் சென்ற போது அங்கு எலிக்கு மின்வேலி அமைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் நிலையில் அந்த மின்வேலியில் சாந்தகுமார் எதிர்பாராத விதமாகச் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக புத்தானத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் உயிரிழந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் அனைவரும் அவரது உடலைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுத காட்சி அந்த பகுதியைச் சோக மயமாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்