திடீரென தீ பிடித்த பள்ளி பேருந்து... 37 குழந்தைகளை காப்பாற்றிய கர்ப்பிணி ஓட்டுநர் - அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ந்த பயங்கரம்

x

பேருந்து தீப்பிடிப்பதற்கு முன்பாக கர்ப்பிணியான பள்ளிப் பேருந்து ஓட்டுநர் பேருந்தில் இருந்த குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Wisconsin மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தில் திடீரென புகை வெளிவர ஆரம்பித்துள்ளது. சதாரித்துக் கொண்ட 24 வயதான 8 மாத கர்ப்பிணி ஓட்டுநர் Imunek Williams, உடனடியாக பதற்றம் அடையாமல் பேருந்தில் இருந்த 37 குழந்தைகளையும் பத்திரமாக கீழே இறக்கியுள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. "தாய்மை உள்ளுணர்வால்" தான் தன்னால் காப்பாற்ற முடிந்ததாகத் தெரிவித்த Imunek Williamsக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்