சுரங்க பணிக்காக வெட்டப்பட்ட அரசமரம் - மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி பசுமை தாயகம் அமைப்பினர் அஞ்சலி

x

சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, ரயில்வே சுரங்க பணிகள் காரணமாக, அங்கிருந்த பழமையான அரசமரம் வெட்டி அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இயற்கை ஆர்வலர்கள், வெட்டப்பட்ட மரத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில், வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. மேலும் வெட்டப்பட்ட அரச மரத்திற்கு பதிலாக 100 மரங்களை தமிழக அரசு நட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்