கணவன், மனைவி சண்டையை பிரிக்க சென்ற உறவினர் மார்பில் குத்தி கொலை - நாமக்கல்லில் அதிர்ச்சி

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கணவன், மனைவிக்கு இடையேயான தகாராறை தடுக்க வந்த உறவினர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம், எல்ஐசி பகுதியை சேர்ந்த தம்பதி விஜயகுமார், ரோகினி. இதில், விஜயகுமார் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதுபோதையில் வந்த விஜயகுமார், வழக்கம் போல் மனைவியுடன் தகராறு செய்யவே, மோதல் முற்றியுள்ளது. இதனிடையே, விஜயகுமாரின் சித்தப்பாவான சேட்டு, தகராறில் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார். எங்கள் குடும்ப தகராறில் ஏன் தலையிடுகிறாய் என கூறி சேட்டின் மார்பு மற்றும் கழுத்தில் விஜயகுமார் கத்தியால் குத்தியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனே அக்கம்பக்கத்தினர் சேட்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்