20க்கும் மேற்பட்டோரை கடித்த வெறி நாய்...இரவு முழுவதும் தேடிப்பிடித்த துப்புரவு பணியாளர்கள்

x

போளூரில் 20க்கும் மேற்பட்டோரை கடித்த வெறி நாய் பிடிபட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், வெறி நாய் ஒன்று பள்ளி மாணவன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்த நிலையில், இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் இறங்கிய துப்புரவு பணியாளர்கள், இன்று காலை வெறிநாயை பிடித்தனர். இதனால் போளுர் பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதனிடையே சாலையில் ஒருவரை வெறிநாய் கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்