"கிண்டிக்கு ஒரு கேள்வி..?"கவர்னரை அலற விட்ட போஸ்டர்கள் - சென்னையில் பரபரப்பு

x

கிண்டிக்கு ஒரு கேள்வி என்ற தலைப்பில் ஆளுநரை கண்டித்து சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஹேமந்த் அண்ணாதுரை என்பவர் ஆளுநருக்கு எதிராக சென்னையில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில், கடும் குற்றங்களை சந்தித்து வரும் மத்திய பாஜக அரசில் உள்ள 44 சதவீத அமைச்சர்களை பதவியில் இருந்து விலகச் சொல்லி டெல்லிக்கு கடிதம் எழுதுவீர்களா என கேள்வி எழுப்பியதுடன், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது 6 வழக்குகள் இருப்பதாகவும், மேலும் 7 மத்திய இணையமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்