மனைவியை கடத்தி சென்று நடுரோட்டில் விட்ட சைக்கோ - வாழும் நரகத்தை காட்டிய காதல் திருமணம்

x

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர், மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரை கரம்பக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தார். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மாரிமுத்து தினமும் அடித்து துன்புறுத்தியதால், திருமணமான நான்கே மாதத்தில் அவரை பிரிந்து, தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி அந்தப் பெண்ணை, மாரிமுத்து தனது நண்பர்களுடன் காரில் கடத்திச் சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சென்னையில் இருந்த பெண்ணை போலீசார் மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். மாரிமுத்து தன்னை மயக்கமடையச் செய்து, ராமநாதபுரம் தர்காவில் மாந்திரீகம் செய்ததுடன், சென்னையில் தர்காவில் பூஜை செய்ததாக கூறினார். பின்னர் நடுரோட்டில் தன்னை விட்டுவிட்டுச் சென்றதாக தெரிவித்தார். தப்பியோடிய மாரிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்