காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தில் கால்பந்து மைதானம் அமைத்து தர வலியுறுத்தி போராட்டம்..!

x

காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகர் கிராமத்தில் வசிக்கும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கால்பந்து வீரர்களாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது கால்பந்தாட்ட மைதானம் அமைத்து தருவதாக, வெற்றிபெற்ற பிரதிநிதிகள் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கால்பந்து மைதானம் அமைத்து தரக்கோரி, மாணவர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாணவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்