தொடர் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்... டென்ஷனான மாணவி - முதல்வருக்கு கடிதம்

x

தென்காசி, அரசுக் கலைக் கல்லூரியில் பிஎச்டி பட்டம் பயின்று வரும் மாணவி, பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்து, முதலமைச்சருக்கு கடிதம் எழுதி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில், பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வணிகவியல் துறையில் தலைவராக இருந்து வரும் அஜித் என்பவர், கடந்த 7 மாதங்களாக பிஎச்டி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. மாணவிகளிடம் அறுவறுக்கத்தக்க வகையிலும், இரட்டை அர்த்தத்திலும் அஜித் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சொல்வதை கேட்காவிட்டால், தடையின்மை சான்றிதழில் கையெழுத்து போடமுடியாது எனவும், யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக் கொள்ளலாம் எனவும் பேராசிரியர் அஜித் மிரட்டல் விடுத்தாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தால், ஆய்வுப் பணியை முடிக்க முடியாமல் திணறி வந்த மாணவி ஒருவர், அஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்