சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

x

திருச்சியில் சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கிளியநல்லூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்