நேராக போன் கடைக்குள் புகுந்த தனியார் பஸ்.. உயிரை கையில் பிடித்து ஓடிய நபர் - அதிர்ச்சி CCTV

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், தனியார் பேருந்து ஒன்று செல்போன் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக வந்த தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கல்லூரி பேருந்து, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், பழக்கடைகள் மீது மோதியது. மேலும், செல்போன் கடை மீது மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த முதியவர், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்