ஓடும் பேருந்தில் வலியால் துடித்த கர்ப்பிணி... பிரசவம் பார்த்த பெண் நடத்துநர் - நெகிழ்ச்சி சம்பவம்

x

கர்நாடகாவில், ஓடும் பேருந்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பெண் நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த நெகிழ்ச்சிகர நிகழ்வு நடந்துள்ளது.

பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அறிந்த நடத்துநர் வசந்தம்மா, பயணிகளை கீழே இறக்கிவிட்டு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தாய், சேயை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர், சக பயணிகளை ரூபாய் திரட்டி மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவினார்.


Next Story

மேலும் செய்திகள்