கர்ப்பமான கல்லூரி மாணவி விபரீத முடிவு

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, கர்ப்பமான இளம்பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாவதி என்ற இளம்பெண், அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனிடையே, எதிர்பாராத விதமாக, தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள வேப்பமரத்தில் பிரபாவதி, துப்பட்டாவால் தூக்குபோட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தற்கொலைக்கு முன் பிரபாவதி எழுதியிருந்த கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அதில் அதே பகுதியை சேர்ந்த காதலன் ஆனந்தராஜ், அவரது சகோதரர்களான அர்ஜுனன், அலெக்சாண்டர் மற்றும் உறவினர் ரஞ்சனி ஆகியோரே, தனது தற்கொலைக்கு காரணம் என எழுதியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்