கூலாக கழுத்தில் கிடந்த விஷ பாம்பு.. கையில் சூடாக ஒரு ஸ்ட்ராங் டீ.. இளசுகளை ஓட விட்ட லெக் தா(த்)தா..!

x

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே, 60 வயது முதியவர் ஒருவர் பாம்புடன் டீக்கடைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டை பிரானூர் பார்டரில் உள்ள டீக்கடைக்கு, கழுத்தில் நல்ல பாம்பை தொங்க போட்டுக்கொண்டு வந்த முதியவர் ஒருவர், டீ ஆர்டர் செய்துள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த முதியவரோ எதுவும் அலட்டிக்கொள்ளாமல், டீயை வாங்கி பருகிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்