500 நாட்கள் ஸ்பெயின் நாட்டில் குகைக்குள் தனியாக வாழ்ந்த வீராங்கனை

x

ஸ்பெயின் நாட்டில் குகைக்குள் தனியாக வாழ்ந்த வீராங்கனை 500 நாட்களுக்குப் பிறகு வெளியே வந்துள்ளார்...

கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் 50 வயதான பியாட்ரிஸ் ஃபிளாமினி கிரானாடா மலைப்பகுதி அருகே பூமிக்கடியில் 70 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள குகைக்குள் சென்றார். 2 கேமராக்கள், ஆயிரம் லிட்டர் தண்ணீர், 60 புத்தகங்களுடன் குகைக்குள் சென்ற அவர், தனது அனுபவங்களை பதிவு செய்ததுடன், கம்பளி பின்னுதல், ஓவியம் வரைதல், படித்த என தனது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்தார். வெளி உலகத்துடன் எவ்வித தொடர்புமின்றி தன்னைத் தவிர வேறு யாருடைய துணையும் இன்றி குகைக்குள் தனியே வசித்த பிளாமினியின் ஒவ்வொரு அசைவையும் உளவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உற்று நோக்கி வந்தனர்... 500 நாட்களுக்குப் பிறகு இருளடைந்த குகையை விட்டு வெளியே வந்த பிளாமினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்