பட்டப்பகலில் ஜட்டியோடு கோயில் கலசத்தை திருட முயன்ற நபர்... வெளியான அதிர்ச்சி வீடியோ

x

திருத்துறை பூண்டியை சேர்ந்த சிவசங்கர் என்பவர், குடும்பத்துடன் மேல் மருவத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு, கும்பகோணம் பேருந்து நிலையம் திரும்பியிருக்கிறார். அப்போது, திடீரென குடும்பத்தினரை விட்டு ஓட்டம்பிடித்த சிவசங்கர், செல்லும் வழியில் மூதாட்டி ஒருவரின் வீட்டினுள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயிலுக்கு சென்ற அவர், அங்கு கோயில் கோபுரத்தில் மீது ஏறி கலசத்தை திருட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்