பழனிக்கு வந்த நபர் திடீர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு.. - கதறும் குடும்பத்தினர்

x
  • பழனி கோயிலில் நெஞ்சுவலியால் ஒருவர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் குடும்பத்தாருடன் பழனி கோயிலுக்கு சென்றார்.
  • அடிவாரத்தில் முடி காணிக்கை செலுத்திவிட்டு மலைக்கு சென்ற போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார்.
  • திருக்கோயில் மருத்துவமனையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும், சிகிச்சை அளிக்காமல் ஆம்புலன்சில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
  • ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஆம்புலன்சில் செயற்கை சுவாசக் கருவி இல்லாத‌தாலும், திருக்கோயில் மருத்துமவனையில் உரிய சிகிச்சை அளிக்காத‌தாலும் உயிரிழந்த‌தாக குடும்பத்தார் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்