சாலையை கடக்க முயன்ற நபர் மீது பேருந்து மோதி விபத்து

x

கேரள மாநிலம் கண்ணூரில், இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது மோதிய தனியார் பேருந்து, அவர் மீது ஏறி இறங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மழையின் போது புதிய பேருந்துநிலையம் அருகேயுள்ள சாலையை இருசக்கரவாகனத்தில் கடக்க முயன்ற நபர், தனியார் பேருந்து வருவதை கண்டு சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த பேருந்து வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்