திடீரென கூவம் ஆற்றில் குதித்த நபர்..! சென்னையில் பரபரப்பு! | Chintadripet

x

சிந்தாரிப்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் என்கிற குணா. இவர், நேற்று மாலை 4 மணி முதல் சிந்தாரிப்பேட்டை கூவம் நதிக்கரை ஓரம் சுற்றி திரிந்துள்ளார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து திடீரென ந‌தியில் குதித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையின்ர, ரப்பர் படகுகள் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தேடினர். பின்னர், மழை விட்டு விட்டு பெய்த‌தாலும், இருட்டியதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்