கிரிக்கெட் விளையாடியவர் மைதானத்தில் சுருண்டு விழுந்து பலி

x

கோவை அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது மைதானத்தில் சுருண்டு விழுந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் தென்னம்பாளையம் அருகில் தனது கிரிக்கெட் குழுவுடன் சேர்ந்து விளையாடி உள்ளார். அப்போது திடீரென மைதானத்தில் வெள்ளியங்கிரி சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்