கிரிக்கெட் விளையாடியபோது சுருண்டுவிழுந்து உயிரிழந்த நபர்... ஒன்றரை மாதத்தில் 8வது அதிர்ச்சி மரணம்..!

x

குஜராத்தில் கிரிக்கெட் விளையாடியபோது 45 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த பொற்கொல்லரான மயூர், தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

அப்போது, திடீரென மயங்கி விழுந்து அவர் மரணம் அடைந்தார்.

மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரியவந்தது.

கடந்த ஒன்றரை மாதத்தில் குஜராத்தில் 8 பேர் இதேபோல் உயிரிழந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்