தர்மபுரியில் 4 மணி நேரமாக டவரில் ஏறி நின்று பகீர் கிளப்பும் நபர்.. விழிபிதுங்கி நிற்கும் போலீசார்

x

தருமபுரி மாவட்டம், பென்னாகரம்-தர்மபுரி சாலையில் இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குள்ளையன்(75) இவரது மனைவி முனியம்மாள் (68) இவர்களுக்கு முனியப்பன்(50) சின்னசாமி(47) இரண்டு மகன்களும் , ஜம்பேரி(52) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களது அம்மா முனியம்மாள் பெயரில் 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை தனது இளைய மகன் சின்னசாமி பெயருக்கு பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரது மூத்த மகன் முனியப்பன் மற்றும் அவரது அக்கா ஜம்பேரி இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலையில் முனியப்பன் என் அனுபவத்தில் உள்ள நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பெயரில் சிட்டா மாற்றி விட்டார் என கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பவர் கிரிட் கார்ப்ரேசனுக்கு எதிரில் உள்ள மின்சார டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக சொல்லி டவர் மீது ஏறியுள்ளார்.

கடந்த 1 மணி நேரமாக டவர் மீது அமர்ந்துள்ளார் விவசாயி

தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். மேற்கொண்டு வருவாய் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்