பானிபூரிக்கு காசு கேட்டதால்... பானிபூரி வியாபாரி கல்லால் அடித்தே கொலை - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

பானிபூரிக்கு காசு கேட்டதால்... பானிபூரி வியாபாரி கல்லால் அடித்தே கொலை - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னை திருவல்லிக்கேணியில், பானிபூரி சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் சென்ற நபரை தட்டிக்கேட்ட வியாபாரி, கல்லால் தாக்கபட்டதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங் என்பவர், சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில், தள்ளு வண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார்.

இவரிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்ட நபர், பணம் தராமல் செல்ல, அவரிடம் அமர்சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், கல்லால் தாக்கியதில் அமர்சிங்கின் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.

வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமர்சிங்கை மருத்துவர்கள் பரிசோதித்ததில், மண்ணீரலில் ரத்தக் கசிவு இருந்தைக் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகும்,

அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கல்லால் தாக்கிய நபர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, விக்னேஷை கைது செய்த போலீசார், அவரை நீதிமனறத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.








Next Story

மேலும் செய்திகள்