ஆற்றில் குளிக்க சென்று மாயமான மூதாட்டி..36 மணி நேரத்திற்குப் பின் தாமிரபரணி ஆற்றில் நடந்த அதிசயம்

x

கன்னியாகுமரி அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்று மாயமான மூதாட்டி 36 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். பாரதபள்ளி பகுதியை சேர்ந்த புஷ்பபாய் என்ற மூதாட்டி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாயமான மூதாட்டி திக்குறிச்சி பகுதியில் ஆற்றின் ஓரமாக சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலின் பேரில், அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், மூதாட்டி புஷ்பபாயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்