வீட்டில் மருத்துவம் பார்த்த செவிலியர்...சிறுவன் உயிரை பறித்த காய்ச்சல் ஊசி | Virudhunagar

x

வீட்டில் மருத்துவம் பார்த்த செவிலியர்...சிறுவன் உயிரை பறித்த காய்ச்சல் ஊசி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டியில் வீட்டில் வைத்து செவிலியர் அக்மேஸ் என்பவர் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் கவிதேவநாதன் காய்ச்சல் காரணமாக சென்ற போது அக்மேஸ் அவருக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனை சென்றும் உரிய பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவனுக்கு ஊசி போட்ட அக்மேஸிடம் விாசரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்பேரில் அக்மேஸை கைது செய்த போலீசார், மருத்துவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்