செல்போன் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்ட நர்ஸ்.. - தீயாய் பரவும் வீடியோ..

x

செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், செஞ்சி அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்கு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தவருக்கு, செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் செவிலியர் தலையில் தையல் போட்டு விட்டுள்ளார். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் இன்வெர்ட்டர் முறையாக பராமரிக்க படாமல் பழுது அடைந்து போனதும், அதனை விரைவில் சரிசெய்யாததுமே இந்த அவல நிலைக்கு காரணம் என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு செவிலியர் தையல் போடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்