சென்னை மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை வழக்கில் புதிய திருப்பம் - பெற்றோர் கண்டித்ததால் நடந்த விபரீதம்..! பேசமறுத்ததால் ஆத்திரம்...
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி கொல்லப்பட்ட விவகாரம்
ரயில் தண்டவாளத்தில் மாணவியை இளைஞர் தள்ளிவிட்டதில், தலை துண்டாகி உயிரிழப்பு
மாணவி சத்ய பிரியா மற்றும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது
சில மாதங்களுக்கு முன் சத்யா, சதீஷ் காதல் வீட்டிற்கு தெரிய வர, பெற்றோர் எச்சரித்துள்ளனர்
கடந்த சில மாதங்களாக சதீஷிடம், சத்யா பேசாமல் இருந்துள்ளார், பிரிந்து விடலாம் என்று கூறியுள்ளார்
3 மாதங்களுக்கு முன் கல்லூரி வாயிலில் வைத்து சத்யாவிடம், சதீஷ் தகராறு செய்துள்ளார்
இது தொடர்பான புகாரில் போலீசார் சதீஷை எச்சரித்து அனுப்பியுள்ளனர்
சத்யாவை சமாதானம் செய்ய சதீஷ் தொடர்ந்து பலமுறை முயற்சித்துள்ளார்
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக சத்யா, தோழியுடன் காத்திருந்துள்ளார்
ரயில்நிலையத்தில் சதீஷ், சத்யாவிடம் தகராறு செய்ய, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது
வாக்குவாதத்தின் போது, சத்யாவை சதீஷ் தண்டவாளத்தில் தள்ளி விட்டுள்ளார்
அப்போது மின்சார ரயில் மோதியதில், சத்ய பிரியாவின் தலை துண்டாகி உயிரிழந்துள்ளார்
தப்பியோடிய சதீஷை 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்